Thursday, December 22, 2005

உடலென்ன ?

படம் : அமராவதி
பாடியவர் : அசோக்
இசை : பால பாரதி

உடலென்ன உயிரென்ன
உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே

ஓடும் நதியெல்லாம் கடலோடு
உடல் எல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே

இந்த வாழ்க்கை வாடிக்கை
வெறும் வாண வேடிக்கை
இன்பம் தேடி வாடும் ஜீவனெல்லாம்
தவிக்குது துடிக்குது !

சரணம் - 1

காதலைப் பாடாமல் காவியம் இங்கில்லை…
ஆனாலும் காதல் தான் பாவம்…
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்குக் கோபம்….

இது சாமி கோபமோ-இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதை எல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதை எல்லாம் கண்ணீரின் வரலாறு

உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்—ஓ…
உலகத்தில் அது தானே சட்டம்..

சரணம் - 2
வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

இது பூவின் தோட்டமா - இல்லை முள்ளின் கூட்டமா…

முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல..
மரணத்தைப் போல் இங்கு வேறேதும் மெய்யல்ல..

நான் போகும் வழி கண்டு சொல்ல - ஓ…
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல..

1 Comments:

Blogger Frank said...

Hey,
thanks for the comment on my blog.
Care to tell me what language your blog is in? Sorry for being so ignorant but this looks out of my world.

Frank

8:48 PM  

Post a Comment

<< Home